பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி-கலைத்துறை

495



அடுத்து, நாட்டுப் புறக் கும்மி, கோலாட்டம், கரகம் சிலம்பு, பொய்க்காலிக் குதிரையாட்டம் முதலியவற்றையும் கூத்து வகைகளுள் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வகைக் கலைகள் இந்தப் பகுதியில் நிரம்ப உண்டு. பொய்க்காலிக் குதிரையாட்டக் கலைக்குக் கடலூர் மிகவும் புகழ்பெற்ற ஊராகும். மாசிமக விழாவிலும், மற்றப் பெருவிழாக்களிலும் இந்தக் கலைகளை இந்தப் பகுதியில் கண்டுகளிக்கலாம்.

ஓவியம்

ஒவியக்கலை பற்றிக் குறிப்பிடத்தக்கதாக ஒன்றுமில்லை. பல்லவ மன்னர்கள் குடைந்த குகைக் கோயில்களிலும் கட்டிய கற்கோயில்களிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. தென்னார்க்காடு மாவட்டத்தில் மண்டகப்பட்டில் பல்லவர் குடைந்த குகைக்கோயில் உள்ளது. வேறு சில இடங்களில் கற்கோயில்களும், கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பொதுவாகச் சிவப்பு, மஞ்சள், பச்சை, கறுப்பு ஆகிய (Vegetable Colours) நிறங்களால் தீட்டப்பட்டிருந்தனவாகக் கூறப்படும் ஓவியங்களை இப்போது காண முடிவதில்லை. பல்லவர் காலத்திற்குப் பின் ஒவியக்கலை இந்தப் பகுதியில் அவ்வளவு வளர்ச்சி பெற்றதாகத் தெரியவில்லை.