பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


பங்க் பதிப்பகத்தார் இந்நூலைச் சிறந்த முறையில் வெளியிட இசைந்தனர். இங்கிலாந்து ஏன் தூங்கியது? என்ற பெயரோடு இந்நூல் அழகிய முறையில் வெளியிட வந்தது. இந்நூல் அமெரிக்க அரசியல் உலகில் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. நாற்பதாயிரம்ப்டிகள் விற்பனையாயின. இங்கிலாந்திலும் இதே அளவு இந்நூல் விற்பனையாயிற்று. அவ்வாண்டு மிகப் பேரளவில் விற்பனையான நூல்களில் இதுவும் ஒன்று. இருபத்துமூன்று வயதுடைய இளைஞர் ஒருவர், மிகத் திறமையோடு அரசியலை ஆராய்ந்து தெளிவான முறையில் பல அரிய உண்மைகளை எடுத்துக் காட்டியிருக்கிருர்" என்று அமெரிக்கத் திறய்ைவாளர்கள் பாராட்டி எழுதியிருந்தனர்.