பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

ஒருவரையொருவர் ஆழம் பார்த்துண்டிருக்கோம். இதைவிட வெறுக்கத்தக்க விஷயம் இருக்க முடியாதுஆமாம், நம்முடைய பின்னணி சங்கீதத்தில் என்ன திடீர் ப்ரேக்?’’

மதுரம் எழுந்து விரைந்து சென்றாள்.

நான் தலையணையில் சாய்ந்தேன். களைப்பு மிகுந்தது எனக்கு. ஏன் இப்படி நெஞ்சொன்று கினைக்க, நா ஒன்று பேசுகிறது? நான் ஏன் பிளந்த மனிதனாகி விட்டேன்?

தடதடவென ஓடி வந்து விளக்கைப் போட்டாள். மதுரத்தின் முகம் சுண்ணாம்பாய் வெளுத்திருந்தது.

"உர்ஷ்-உர்ஷ்-'

“என்ன? என்ன?' அலறி புடைத்துக் கொண்டு எழுந்தேன்.

கானோம் என்கிற சைகையில் அவள் கைகள் சிலம்

பாடின.

"உர்ஸைக் காணோமா? என்ன பேத்தறே?... பாத்ரும்-'

அவள் விழிகள் பிதுங்கின. வலது சுட்டுவிரல் இடது பக்கத்து அறையை நோக்கிக் காற்றை அவசரமாய்க் கொத்திற்று. கிதார் சத்தம் அங்கிருந்துதான் வந்தது. இப்போ கின்று விட்டது. அவள் குறிகாட்டிய அர்த்தம் மண்டையில் ஊறியதும் எனக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது. மைகாட் எழுந்து ஓடிப்போய் அறைக்