பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

ஆளை வில்லாய் வளைத்தது. ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிக் கொண்டு தவித்தார், முகம் குங்குமப் பிழம்பாய்

அவரைப் பிடித்துக் கொண்டு அவள் முன்வந்தாள். ஆனால் அவர் கையைப் பலமாக ஆட்டி, அவள் கையைத் தீர்மானமாக உதறினார். அவர் கண்கள் கொதித்தன. அடர்ந்து கரைத்து கண்குழிமேல் தொங்கும் கரடிப் புருவங் கள்.

செங்கல்பட்டு வந்ததும் நாலு இட்லி, இரண்டு வடை பார்சல் வாங்கி அவள் எதிரே வைத்தார்.

விழுப்புரத்தில் இரண்டு பொட்டலம் சாம்பார் சாதம், இரண்டு பொட்டலம் தயிர் சாதம்.

அவர் செய்கையில் கருணை, ஆதரவு, உபசரிப்பு இல்லை.

'தொலைச்சுக்கோ, சனியனே என்கிற மாதிரி.

பொட்டலங்களை அவருடன் பகிர்ந்து கொள்ள அவள் முன் வந்த போது, கையை ஆட்டி மறுத்து விட்டார். ஆனால், இளம் வயிறு பசிக்கிறதே! அவர் எப்படி கொடுத் தாலும் வாங்கி கொள்வதை விட வழி?

திருச்சியில் ஒரு பன், ஒரு காப்பியோடு அவர் சரி.

அவளுக்கு பக்கோடா, பஜ்ஜி பொட்டலங்கள், டீ.

மதுரையில் இரண்டு சாம்பார் சாதங்கள், இரண்டு தயிர் சாதங்கள்.

அத்தனையும் அவளுக்கே.

இதுவரை இருவரிடையிலும் ஓர் பேச்சுக்கூட தொடுக்கவில்லை,