பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f0?

அவள் முதன் முதலாகப் பேச்சுத் தொடுத்தபோது, வண்டி பூனலுாரைக் கடந்து கொண்டிருந்தது. இனி மலை ப்ரதேசத்தின் செழிப்புள், கையால் தொட்டு விடலாம்: குறுகிய பாறை நடுவில் இருப்புப் பாதை நுழைந்து மேடு தாழ்வுகளில் ஊசல்ாட்டமாய்ச் சென்று கொண்டிருந்தது. ஆயினும் இரவாதலின் கண் கண்டு அனுபவிக்க வாய்ப் பில்லை. சென்னைக்குப் போகும் போது இது வழி யாகத்தான் போனோம் என்ற நினைப்போடு சரி.

இனிமேலேயே சற்று அடைப்பான உணர்வுதான். கஸ்தூரிப் பெட்டியில் அடைத்தாலும் மூச்சு திணறல் தான்.

அவள் குரல் அமைதியாகத்தான் ஒலித்தது.

ஸாமி சித்தம் யாது? நேரே போயுன்னு அச்சனிடம் தள்ளிடனும் அல்லோ ?”

'ஸாமி அச்சனிடம் என்ன பறையும்? நீங்கள் மோளே களங்கம் கண்டாச்சு அப்படித்தானே அல்லோ?”

இதுவரை இதுபற்றி யோசிக்க வில்லை. யோசிக்க வேண்டிய விஷயம்தான். முழுக்க யோசிக்காமல் இல்லை. ஆனால் யோசிக்க பயம். மிஸ்டர் ஜியார்ஜ் பெரிய ப்ளாக் மெயில் மாஸ்டர் ஆச்சே திறந்த வாயில் அவனுக்கு உரித்த பழம் விழுந்த மாதிரின்னா? அசம்பாவிதத்துக்குப் பரிகாரம், ப்ரபு இவளைக் கட்டிக்க வேண்டியதுதானே? எங்களுக்குள் பரஸ்பரம் என்ன தட்டுக் கெட்டுப் போச்சு?

இஷ்டப்பட்ட போது போவேன் எங்கென்று சொல்லேன்.

இஷ்டப்பட்ட போது வருவேன்.