இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
114
"எஸ். எஸ்!! எஸ்!!!' என்று உள்ளுணர்வு மறுத் துக் கேலி செய்தது. குடிசையின் நான்கு சுவர்களும் தழுவ வேகமாக நெருங்கின. குடிசையின் கூரை மண்டையுள் கேவிற்று; வெளியே ஒடி வந்தார். கால்கள் தாமே ஒடத் தலைபட்டன. விடிவேளையின் முன்னிருட்டு மரங்கள் கிளைகளை ப்ேடித் தம் அடருள் அழைத்தன. பத்தடி கூடத் தாண்டவில்லை.
"எஸ். எஸ். எஸ்il'-கேலி துரத்திற்று.
ஸ்-ஸ்-ஸ்
வலது புறங்காலைச் சீறல் கொத்திற்று.
'அம்மா!' வாய் விட்டு அலறினார்.
'அம்பீ!' வாய்விடாத எதிர் அலறல்.
தடுக்கி விழுந்து, உடலில் மணியாங்கற்கள் குத்தின.
இனி ஒட வேண்டிய அவசியமேயில்லை, கன்றாய்த் தெரிந்தது; இருந்தாலும், எழுந்து உட்கார்ந்து காலைச் சுற்றி இறுக்கிய, இன்னும் இறுகிக் கொண்டேயிருக்கும் முடிச்சைக் கழற்ற முயன்றார், முயன்று கொண்டே இரு
-ந்-ந்-க்
- w-a*-r** *-«s...
(முற்றும்)