பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உர்ஸ் வெளியே வருகிறாள்.

குனிவதும், கிமிர்வதும், வளைவதும், நெளிவதும்காட்டிய மற்று, இயல்பான கடமாட்ட அங்க அசைவுகளில் உர்ஸ் பெரிய டெக்னிஷியன். அதில் ஸ்வயம்பு.

"ஸாமி சித்திரையில் தாமளிச்சதோ? aேrto வின் கட்டைக்குரல்.

'வாமி நேரத்துக்கு எழுந்தாச்சு. மை மான் ஃப்ரைடே தான் தாமஸம்.'

தேஷியம் வேண்டா. சாயாவுக்கு வெள்ளம் சுடுகைக்கு வெச்சாச்சு.”

அவளிடம் நான்தான் மலையாளம் பயில்கிறேனோ? அல்ல... அவளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறேனோ? இந்த பாஷைக் கொலையில் எங்களிடையில் ஒரு வெள்வால் (பறவையுமில்லை-மிருகமுமில்லை) பாஷை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் ரீதியில். -

“ஸாமி ஜாக்கிரதை செய்யட்டும். பாதையில் ஞான் இப்போ ஒரு ஸர்ப்பம் கண்டது.”

என்னை அறியாது கைகள் கூப்பிக் கொள்கின்றன. கேற்றே அம்மா கனவில் வந்தாள். மனம் வேகமாய் ஏதேதோ கணக்குப் போட்டது.

நாள், கிழம்ை, பசும், திதி சரிதான் ஆச்சரியமில்லே. 'இன்று என் தாயாரின் சிரார்த்த திதி.”