பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31



'இல்லை கருணாகரன் ஊர் திரும்பறேன். பன்னி ரண்டு மணி வண்டியைப் பிடிச்சால், சாப்பாட்டுக்கு வீட்டுக்கே போயிடலாம்.'

என்ன சார் பல்டி? இருந்து சாப்பிட்டுவிட்டு, மாலை ஒரு மலையாளப் படம்-எங்கள் ப்ரேம் நnர், ஷீலா ஜோடி. நீங்கள் பார்த்தே ஆகணும். நடிப்பு என்ன என்று அப்புறம் நீங்களே சொல்லப் போறங்க.'

(ஹ-ம். உங்களைவிடவா?)

"இரவு தங்கிட்டு காலை குழல்புட்டு தேங்காய்ப் பாலோடு சாப்பிட்டிருக்கீங்களா? என் மாமியார் ஸ்பெஷல், வந்திருக்காங்க-'

'இல்லை கருணாகரன், கான் கிளம்பறேன். வீட்டில் போட்டது போட்டபடி அப்படியே வந்திருக்கேன்-'

இவனோடு ஒருகணம் எனக்கு இருப்புக் கொள்ள வில்லை. இங்கு விட்டுக் கயண்டால் போதும்.

'என்ன ஸார், அவங்க சமைச்சு வெச்சுக்கிட்டு ஆவலோடு எதிர்ப்பார்த்துட்டிருக்காங்க. நீங்களே பசின்னீங்க. உடனே காலில் கஞ்சியை வடிச்சுக்கிட்டு நிக்கறிங்க."

'இல்லை; அடுத்த தடவை பார்த்துக்கலாம்.'.

பெருமூச்செறிந்தார்.

'ஏ பையா, பச்சை வாழைப்பமும் ஒரு இருபத்தி அஞ்சு வாங்கிவா-ஊம், ஜல்தி'

நான் கடையை விட்டு இறங்கி விட்டேன்.

'என்ன ஸார், பணம் வேண்டாமா?’’

'ஒ, ஸாரி, தாங்ஸ்.'