பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

தரையில் இன்னும் அழுந்தத் தோண்டிக் கொண்டு கின்றார்.

அந்த நிமிஷம். நாங்கள் ஒருவரையொருவர் கரித்த கரிப்பு கருகல் கெடி அடித்தது.

நான்தான் தோற்றேன். சினிமாவில் இந்த கெளபாய் கட்டம் எனக்குப் பொறுக்க முடியவில்லை. குனிந்து பொறுக்கியெடுத்து அவர் கையுள் திணித்தேன். நான்தான் பலஹீனன். அவன் நின்ற நிலையில் காலத்துக்கும் கல்தூணாய் சிற்பான்.

எனக்கு 95 ஸ்லாம் அடித்து விட்டு விர்ரெனத் திரும்பிப் போய் விட்டான்.

ஊரிலிருந்து திரும்பி வந்ததும் இடத்தைக் காலி பண்ணிவிட வேண்டியதுதான். உர்ஸ்?

இன்று மாலையே எங்கேனும் இவர் உருண்டு கிடக்கும் இடத்தைத் தேடிப்பிடித்து தலை கசுங்க ஒரு பாராங் கல்லை இவன் மேல் போட்டால்தான் எனக்கு வயிற்றெரிச்சல் பாதியேனும் தீரும். ஆனால் அது சாத்திய மல்ல, நான் வேறு ஊர் ஆள். அதுவும் கிழக்கத்தி ஆள். சுருக்கத் துப்புத் துலக்கி ஆகி விடும். கையில் காப்புப் பூட்டி விடுவார்கள். தவிர, உடனே இப்போ மெயிலைப் பிடித் தாகணும்.

கடவுள் கியாயங்களை வழங்கும் வழியே தனி. ஜ்யார்ஜ் பாடு சுகம் உர்ஸ் பாடு சுகம். உற்றவர் மற்றவர் துரத்தலுக்குப் பயந்து எங்கேயோ ஓடிவந்து ஒளிந்து கொண்டிருக்கும் என்னை வளை தோண்டியெடுத்து வேட்டையாடி, எவர்களிடமிருந்து ஓடி வந்தேனோ, அவர் களிடமே என்னை விரட்டுவது தான் அவர் வழி.