பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை

வண்டி செங்கோட்டை வந்ததும், பூமி சமவெளியாக வியாபித்து அதன் மேல் வானத்தின் கவியல் கண்டதும் எனக்கு என்னவோ மலைகள் வைத்த சிறையினின்று விடு பட்டாற் போன்றதொரு வெளிச்சம். ஐந்து வருடங் களுக்குப் பின்னல்லவா வருகிறேன்!

இந்தத் திடீர் மாறுதல் கண்டு உர்ஸ் குழந்தை போல் கொக்கரிப்பாள் என்று எதிர் பார்த்ததற்கு அவளிடம் அதுபோல் எதிர்ச் செயல் ஏதும் தென்பட வில்லை. தன் உணர்ச்சிகளை சீசாவில் அடைத்துக் கொண்டிருந்தாளோ அல்ல பாதிப்பே ஏதும் இல்லையோ?

உர்ஸ் எமத் தினி தின்கிறாள். கருணாகரன் கொடுத்த பார்ஸலை அவள் தான் காலி பண்ணினாள். கணிசமாக ஒரு மிக்ஸ்சர் பொட்டலம், ஒரு பெரிய ரொட்டி. பிறகு பூணலூரில் மதியம் சாப்பாடு. இப்போ பிற்பகல் சிற்றுண்டிக்குத் தயாராகி விட்டாள். அவளைக் கரித்து என்ன பயன்? என் வயதில் சிறுசுகளுடன் போட்டி போட முடியுமா?

சென்னை சேர்ந்தபின் அது வீடோ, ஹோட்டலோ, எதுவாயினும் சரி மாற்றி மாற்றி ஒரு வாரத்துக்கு வெட்ட லும். அடை, சேவை, மோர்க்கூழ், அரிசி உப்புமா, குழம்பு மாவு உப்புமா-சே, மானம் போக காக்கு இப்படியா செத்துப் போகனும்?

எங்கே செத்துப் போச்சு?

உடல் செத்தாலும் ருசிகள் சாகா,