பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

“ஓ, மறந்தேனே. மதுரம் இது உர்ஸ்-இவள்-இவர் கள் வீட்டில்தான் நான் குடியிருக்கிறேன். உர்ஸ் இது மதுரம், இது யார்னு நான் சொல்லத் தேவையில்லை.'

கையில் பெட்டிப் பிடியை மாட்டிக் கொண்டபடியே உர்ஸ் கைகூப்பினாள். மதுரம் அவளை அப்படியே ஒரு கையால் அணைத்துக்கொண்டாள்.

சேரி, போவோமா?"

கடந்து வெளி வருகையில், ஒரக் கண்ணால் கவனிக் கிறேன்.

அவள் எங்களை நடத்திச் சென்றது டாக்ஸிக்கு அல்ல. கார் குட்டிதான். ஆனால் தனிக்கார். மதுரம் என்னைப் பார்த்து வெற்றிப் புன்னகை புரிந்தாள். அதான் அவளுடைய ஸஸ்பென்ஸ் பெற்றவள் பெருமை. இருக்க வேண்டியது தானே! ட்ரைவர் எனக்கு ஸெல்யூட் அடித் தான். சீருடையிலிருக்கிறான்.

மூன்று பேரும், பின்னால் நெருக்கிப் பிடித்து உட்கார்ந்து கொண்டோம்.

ஸோ சியாமா பரமபத படத்தில் பெரிய ஏணியில் ஏறிவிட்டான். ஏற்கனவே எனக்கு சவால் விட்டிருக் கிறான்.

'கான் இந்த வீட்டு சகாப்தத்தையே மாற்றி அமைப்

w = 2

பேன்’ என்று.

'சியமங்த் சித்திரை வாக்கில் ஜெர்மனிக்குப் போவான் போலிருக்கு. அவன் ஆபீஸில் அனுப்பறா.'

'சியமந்தா! நான் புரியாமல் விழித்தேன். அவள் கன்னம் சிவப்பேறிற்று. அதான் நம்ப சியாமா தான்.'