பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

அவ்வளவு உணர்ச்சி. முதல் விழுங்கில் நூல் பிடித்த மாதிரி அந்தக் கொதிப்புச் சூடு உள் இறங்குகையில-விழி கருகு கிறது. மதுரம் தீர்க்க சுமங்கலி பவ. ஒஹோ இப்பவும் என்னைத்தான் ஆசிர்வதித்துக் கொள்கிறேனோ?

உர்ஸுக்கு டீ-கண்ணாடி தம்ளரில் தனி, சீப்பிக் குடிக்கிறது. அறிந்து தான் அவளுக்குக் கண்ணாடி தம்ளர் சர்வீஸ்,

'ப்ரபு எங்கே கண்ணிலேயே படவில்லை' எனக்குத் திடீரென்று கினைப்பு வந்தது.

'ப்ரபு காம்ப்-'

வேலைக்கு அப்போ என்னியிலிருந்து-"

jo

‘'வேலைக்கு இன்னும் வேளை வரவில்லை’ முனகி னாள் ஒரு லைட்ம்யூஸிக் குழுவில் கிட்டார் வாசிக் கிறான். நீங்கள் கொங்கணவன் முழி முழிச்சு என்ன பண்றது? எல்லாம் வேளைவரப்போத்தானே? சுந்தர காண்டம் பாராயணம் போன ஞாயிறுதான் பூர்த்தி யாச்சு.'

'வடைமாலை, பாயசம், வடை பருப்புடன், வெள்ளரிக்காய் மறக்காமல்?'

ஆமாம் அப்பிடித்தான். உங்கள் கிண்டலெல்லாம் அனுமாரிடம் வெச்சுக்காதேயுங்கள். இனிமேல் தான் அவர் கிருபை தெரியணும்-ஆ வாங்கோ வாங்கோ, இவர்தான் இந்தாத்து மாமா-இவர் பக்கத்துப் ஃப்ளாட்...'

ஆச்சு ஒண்னு ரெண்டாயும் ஒவ்வொருத்தராயும் பக்கத்து ஃபிளாட் மேல்மாடி, கீழ்மாடி இந்தக் கட்டிடத் திலேயே இருபது குடித்தனங்கள் தேறும். எல்லாரும் பெரிய மனுஷாள் இது போஷ் ஏரியா.

கே. எ-5