பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மாமாவைப்பற்றி மாமியிடம் விசாரிக்க வருபவர் களுக்கு காபி வித் பிஸ்கட். என் வயதில் கதாநாயகனா வதற்குக் காணாமல் போவது காட்டிலும் உகந்த வழி எது? அஞ்சு வருடம் அட்ரெஸ்ஸே இல்லாமல் இருந்தவன் ஒண்னு-கள்வி உடுத்து மொட்டை சாமியாரா இருக் கணும். அப்படியே வெள்ளை கட்டியிருந்தாலும் சடைமுடி தாடியுடன் இருப்பேன் என்று எதிர் பார்த்தார்களோ என்னவோ? அதுவும் கிடக்கட்டும். பஞ்சலோக விக்ர ஹத்தை திருடுவதுதான் நாகரிகம். ஆனால், மூலவரையே பெயர்த்து எடுத்து வந்து விட்ட பூசாரி நான் மாதிரி, என்பக்கத்தில் அசைவற்று கிற்கும் உர்ஸ், வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்குச் சரியான அவல்.

ஆண்டிக்கும் பணிவிடைக்கு ஒரு அடியாள் தேவை தானே!"

"சக்தி உபாசனையாக இருக்குமோ? நேரிடையாகப் பீடத்திலேயே ஏற்றி பூசை செய்யற மாதிரி அப்படி ஒரு வழிபாடு இருக்காமே!”

'-மதுராமாமியை ஒரு ஞானின்னு நான் சொல்வேன். இந்த அக்ரமத்தை யெல்லாம் தாங்கிக்க ஒரு மனோபக்குவம் வேண்டாமா?'

எனக்குமட்டும் அவர்கள் எண்ணங்கள் காது கேட் கின்றன. எனக்கு உள்ளூர உவகை பொங்கிற்று. பேஷ், உர்ஸ்!

ஆனால், உர்ஸ் ஏனோ மக்கு வேஷம் போடுகிறாள்.

வந்தவரெல்லாம் ஒரு வழியாகப் போனபின்னர் எங்கிருந்தோ வருவது போல் இளஞ்சிரிப்புடன் மதுரம் சுறுசுறுப்பாக உள்ளே வந்தாள். இந்தப் பொண்ணைக்