பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

பின் வாங்கிடறேன். எனக்குப் பழைய தெம்பு இல்லை. என்னை எதற்கு வரவழைத்தாய் என்று உனக்கே தெரியா விட்டால் நான் என்ன செய்ய முடியும்'

மதுரம் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். டாங்கென்று இனிப்பாய் அழைப்புமணி ஒலித்தது. கதவைத்திறக்கச் சென்றாள்.

சிரித்துக் கொண்டே ஸ்ேது வந்தான். அப்பா என்று அழைக்க அவனுக்குப் பேச்சு வந்த நாளிலிருந்தே லஜ்ஜை. எல்லாவற்றிற்கும் அவனுடைய இளிப்பு ஈடுசெய்துவிடும். அந்த லஜ்ஜை இளிப்புத்தான் ஸ்ேதுவின் சிறப்பு. சற்றுப் பெரிதானாலும் ஒழுங்கான பல்வரிசை.

என் கையில் ஆப்பிளைக் கொடுத்து அவன் நமஸ்கரிக் கையில் தொப்பை மேல் உடல் கின்றது,

என்ன ப்ரதர் ரொம்ப கனவானாயிட்டே இந்த வயசிலேயே இந்த வெயிட் உஷாராயிருக்கணும்.'

"சுபாவத்திலேயே அவன் கூஷ் பாண்ட சரீரம் தானே!"

மதுரம் இடைமறித்தாள்.

'உன் பிள்ளையை ஒண்னும் சொல்லிடல்லே, அவன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.'

"நீங்கள் கம்பமாட்டேள். இப்போல்லாம் நான்

டிபனே சாப்பிடறதில்லே.'

“என்ன ஷாக் கொடுக்கிறே. அடை என்றால் உனக்கு உசிராச்சே மாஸ்க்கடைசி கூட பார்க்காமல் உன் தாயார் நனைச்சுடுவாளே!'