பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ל"ל

'கோ...கோ...டாடி மிஸ்டர் ப்ரபு.’’

மார்மேல் கைக்கட்டலுடன் ப்ரபு உர்ஸை சிந்தித்துக் கொண்டு நடுக் கூடத்தில் கிற்கிறான். அவனுடைய தோரணையான அந்த அமைதியின் அடியில் ஏதோ சிறகு களின் படபடப்பு சிலிர்த்தது.

அதே சமயத்தில் அந்தப் புது விழிப்பால் ஒரு திகைப்பு. உளி வடித்த புத்துருவின் உக்கிரம்.

அரிவாளின் விச்சுப்போல் நடுவகிடினின்று கூந்தல். இருசரேல் வீழ்ச்சிகளாய்ப் பிரிந்து சரிந்து பின்னுக்கு ஒடிச்சேர்ந்து தடித்த பின்னலில் முடைந்து கொண்டன. அதில் ஒரு தாழம்பூ மடல் கத்தி போல் சொருகிக் கொண்டிருந்தது.

சமையலறையிலிருந்து மதுரம் விரைந்து வந்து உர்லை நெற்றியில் தொட்டுச் சட்டென்று அணைத்துக் கெர்ண் டாள். பிரிந்து அவள் தோள்களைப் பற்றித் தன் எதிரே நிறுத்தினாள். உர்ஸின் புருவ மத்தியில் இப்போது குங்குமம் திகழ்ந்தது. மின்சார விளக்கில் திடீரென்று லோடு ஏறினாற் போல் ஒருப் புதுப் பரிணாமத்தில் பிதுங்கினாள். நெற்றியில் திடுக்கென உதயமான அந்த செஞ்சுடர் வட்டத் துடன் அந்த மேனிக் கறுப்பு, இந்த ப்ரமை தட்ட, கூட்டு சேர்ந்து கொண்டது.

அமானுஷ்யை

கன்யாகுமரி

தாrாயணி

தடாதகை

திரெளபதி