88
“என்ன ப்ரபு. வந்து ஒஞ்சு உட்கார்ந்திட்டே? கச்சேரி ஒரு வழியா ஒஞ்சுதா'
'இல்லையே கடந்துண்டிருக்கே!'
ஏன், t சேர்ந்துக்கல்லியா?”
கையை வெறுப்பில் உதறின்ான். "படுபோர்!’
‘'நீ ஆடின.சாமியாட்டத்தைப் பார்த்தால் இரண்டறக் கலந்திருங்தையே!'
எல்லாம் 'டுப்' அப்பா இந்த மியூஸிக்கின் ஜீவநாடியே பாசாங்கு தான்.'
- புரியல்லே'
'எல்லாம் முடுக்கிவிட்ட கோரணிகள். மேனாட்டில் செய்கிறான்கள். கோட்டையும் சூட்டையும் மாட்டிண்டு இந்த ஆட்டமும் பாட்டமும், அவர்களைப் பார்த்து நாம் காப்பியடிக்கிறோம்.'
காதில் வாங்கிக் கொள்ளாமலே, அவர்கள் செய்வதே பொய், அதனால்.காம் பொய்யிலும் பொய்."
அப்போ எது சிஜம்' இதன் அயன், ஆப்பிரிக்காவின் காடுகளில் அவர்
களுடைய தாரை, தமுக்கு தப்பட்டைகளுடன், தோலையும் எலும்பு மாலைய்ையும் மண்டையோடு களையும் மாட்டிக் கொண்டு, மாட்டிக்கொண்ட
நரபலியைக் கட்டிப் போட்டு அதைச்சுற்றி க்ரோ ஆடுகிறானே, அல்லது ஆடினானே, அல்லது இன்னும் கம் நாகரிகங்களின் அடிச்சுவடு படாத இடங்களில் அவன் பண்புகள், கம்பிக்கைகள் கலப்படமாகாமல் எங்கோ ஆடிக் கொண்டிருக்கிறானே-அது அசல். நான் சொல்வதை