இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
99
ஒரு குறிப்புத் தருகிறேன். அவர் பர்மாவிலுள்ள மாண்டலேச் சிறையில் இருந்த போது கீதா ரகசியம்' என்ற நூலை எழுதினார்.
பத்ம : தெரிகிறது, தெரிகிறது. அவர்தான் பாலகங்காதர திலகர்.
பால: சரியாகச் சொன்னாய். நம் தேசத்தில் உள்ள மாநிலங்களிலேயே மிகப் பெரியது எது ?
சுப்பிர : உத்தரப் பிரதேசம்.
பால : தவறு.
இராஜ : மத்தியப் பிரதேசம்தான் மிகப் பெரியது.
பால: இராஜலெட்சுமி சொன்னதுதான் சரி... பெரும்பாலான தமிழ் மருந்துகளில் மூன்று பொருள்களைச் சேர்ப்பார்கள். அவற்றில் ஒன்று மிளகு. மற்றவை:
சுப்பிர: சுக்கு, மிளகு, திப்பிலி என்பார்களே!