இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
102
என்ற நகரம். அதை 'வட மதுரை' என்றும் அழைப்பார்கள்.......தமிழ் டிக்க்ஷனரியை அதாவது, அகராதியை முதல் முதலில் தயாரித்தவர் யார் என்று தெரியுமா?
இராஜ: தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதய்யர்.
பால: இல்லை.
சுப்பிர : பரமார்த்த குரு என்ற வேடிக்கைக் கதையை எழுதினாரே, அவர் பெயர்.... தொண்டை வரை வந்துவிட்டது....
பால : உம், சீக்கிரம் வாய்க்கு வரவழை,
சுப்பிர: இதோ வரவழைத்து விட்டேன். வீரமா முனிவர்.
பால : சுப்பிரமணியா, சரியாகச் சொன்னாய். இத்தாலி நாட்டைச் சேர்ந்த அவர் தயாரித்த சதுரகராதிதான், பிறகு வெளிவந்த தமிழ் அகராதிகளுக்கெல்லாம் முன்னோடி ... இது வரை உலகிலேயே மிகப் பெரிய பரிசான நோபல் பரிசைப் பெற்ற இந்தியர்கள் யார், யார்?
பத்ம : இரவீந்திரநாத தாகூர், சர் சி.வி. ராமன்.
பால : இன்னும் இருவர் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் ?
சுப்பிர : எஸ். சந்திரசேகர்...