பக்கம்:கேள்வி நேரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


ராஜேஸ்வரி : இராஜஸ்தான்.

சூடாமணி: சரியான விடை நம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதல் முதலாக பி. ஏ. பட்டம் பெற்றார் ஒரு தமிழறிஞர். அவர் யார்?

ஆனந்த்: உ. வே. சாமிநாதய்யர்.

சூடாமணி: இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா?

எல்லோரும் : (மெளனம்)

சூடாமணி: சரி, நானே சொல்கிறேன். அவர் பெயர் சி. வை. தாமோதரம் பிள்ளை. இலங்கையில் பிறந்தவர். பனை ஒலையி லிருந்து பல நூல்களைப் பதிப்பித்தார். பல நூல்களையும் எழுதித் தந்தார். சரி, நம் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருக்கும் ஒருவர், சிறந்த கவிஞராகவும் திகழ்கிறாரே, அவர் பெயர் தெரியுமா?

சுப்பிரமணியம் : எனக்குத் தெரியும். சமீபத்தில் என் அப்பாவுக்குத் தெரிந்த ஒருவருக்கு ஒர் அழைப்பு வந்திருந்தது. அதிலே இருந்தது அந்தப் பெயர். அவர்தான் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர். பெயர் வி. சி. குழந்தைசாமி. ஆனால், குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதை எழுதுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/115&oldid=484693" இலிருந்து மீள்விக்கப்பட்டது