இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
121
பத்மா: ரொம்ப சரி. டென்னிஸ் எந்த நாட்டில் தோன்றிய விளையாட்டு?
பிரபா : இங்கிலாந்தில்.
பத்மா: ஆம் ஆங்கிலேயர் நம் நாட்டுக்கு வந்த பிறகே, இங்கும் இந்த விளையாட்டு பரவியது . தமிழ்ப் பல்கலைக் கழகம் எந்த ஊரில் இருக்கிறது?
வரத: தஞ்சாவூரில். பத்மா : சரி, உலகத்திலே மிகவும் உயரத்தில் இருக்கின்ற நாடு எது?
வரத: சிம்லா.
பத்மா தவறு. நான் கேட்டது எந்த நாடு என்று?
பமீலா : திபேத்து.
பத்மா : கரெக்ட். அதனால்தான் அதை 'உலகத்தின் கூரை" என்கிறார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பாடியவர் யார்?
வரத: அப்பர்.
பிரபா: இல்லை. திருநாவுக்கரசர்.
பத்மா : இருவர் கூறியதும் சரியே. திருநாவுக் கரசரைத்தான் அப்பர் என்றும் அழைப்