இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
122
பார்கள். ஷேக்ஸ்பியர் எத்தனை நாடகங்கள் எழுதியிருக்கிறார். தெரியுமா?
எல்லோரும் : (மெளனம்)
பத்மா : 37 நாடகங்கள். மங்கள முடிவு நாடகங்கள், சோக முடிவு நாடகங்கள், சரித்திர நாடகங்கள் என்று மூன்று வகையில் எழுதி யிருக்கிறார்... காஷ்மீர் நகரம் எந்த ஆற்றங் கரையில் இருக்கிறது?
பமீலா: ஜீலம் நதிக்கரையில்.
பத்மா: சரியான விடை, ஆஸ்திரேலியாவின் தேசியப் பறவை எது?
வரத: கழுகு.
பத்மா: தவறு.
பிரபா :நினைவில் இருக்கிறது. வர மாட்டேன் என்கிறது. படத்தில் கூட அதைப் பார்த்திருக்கிறேன்? அது நெருப்புக் கோழி மாதிரி உயரமாயிருக்கும். பறக்கத் தெரியாத பறவை. அதன் பெயர் கி. மு....இல்லை. இல்லை. ஈமு.
பத்மா: ம்... அதன் பெயர் ஈ.மு தான். 6 அடி உயரம் வளரும். ஒவ்வொரு காலிலும் 3 விரல்கள் இருக்கும்...சரி, அடிக்கடி நாம் பார்க்கிறோம், பழகுகிறோமே நாய் அதற்கு