123
முன் காலில் எத்தனை விரல்கள்? பின்காலில் எத்தனை விரல்கள்?
பமீலா: இரண்டிலுமே ஐந்து விரல்கள்தான்.
பத்மா: இல்லை. முன் காலில் 5 விரல்களும் பின் காலில் 4 விரல்களும் இருக்கும். பின் காலில் 5 விரல்கள் இருப்பது அபூர்வமே... இந்தியாவில் மிகப் பெரிய இலக்கியப் பரிசான ஞான பீடப் பரிசு ஒவ்வோராண்டும் வழங்கப்படுகிறது. நம் தமிழ்நாட்டில் இந்தப் பரிசைப் பெற்றவர் யார்?
வரத: அகிலன்.
பத்மா : சரி, இந்தப் பரிசை ஏற்படுத்தியவர்கள் யார் என்று தெரியுமா?
எல்லாரும் : (மெளனம்).
பத்மா : சாந்தி பிரசாத் ஜெயின், அவரது மனைவி ரமாஜெயின் இருவரும் ஏற்படுத்தினர். இப்போது அந்த இருவரும் உயிருடன் இல்லை...தமிழ்த் தாத்தா உ. வே. சாமி நாதய்யர் அவர்களுக்கு, அவரது பெற்றோர் வைத்த பெயர் என்ன?
வரத: வேங்கடராமன்.
பத்மா : ஆமாம். பாட்டனார் பெயரையே பேரனுக்கு வைத்தார்கள். மாமனார் பெயரை மருமகள் சொல்லக் கூடாது என்று நினைத்த