பக்கம்:கேள்வி நேரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


முன் காலில் எத்தனை விரல்கள்? பின்காலில் எத்தனை விரல்கள்?

பமீலா: இரண்டிலுமே ஐந்து விரல்கள்தான்.

பத்மா: இல்லை. முன் காலில் 5 விரல்களும் பின் காலில் 4 விரல்களும் இருக்கும். பின் காலில் 5 விரல்கள் இருப்பது அபூர்வமே... இந்தியாவில் மிகப் பெரிய இலக்கியப் பரிசான ஞான பீடப் பரிசு ஒவ்வோராண்டும் வழங்கப்படுகிறது. நம் தமிழ்நாட்டில் இந்தப் பரிசைப் பெற்றவர் யார்?

வரத: அகிலன்.

பத்மா : சரி, இந்தப் பரிசை ஏற்படுத்தியவர்கள் யார் என்று தெரியுமா?

எல்லாரும் : (மெளனம்).

பத்மா : சாந்தி பிரசாத் ஜெயின், அவரது மனைவி ரமாஜெயின் இருவரும் ஏற்படுத்தினர். இப்போது அந்த இருவரும் உயிருடன் இல்லை...தமிழ்த் தாத்தா உ. வே. சாமி நாதய்யர் அவர்களுக்கு, அவரது பெற்றோர் வைத்த பெயர் என்ன?

வரத: வேங்கடராமன்.

பத்மா : ஆமாம். பாட்டனார் பெயரையே பேரனுக்கு வைத்தார்கள். மாமனார் பெயரை மருமகள் சொல்லக் கூடாது என்று நினைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/125&oldid=484703" இலிருந்து மீள்விக்கப்பட்டது