பக்கம்:கேள்வி நேரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


கார்த்தியாயினி: . வியாசர் சமஸ்கிருதத்தில் எழுதினார்.

பொன்: சரியான விடை அதைத் தழுவித் தமிழில் யார் யார் எழுதினார்கள்?

கார்த்தியாயினி: வில்லிபுத்துராழ்வார்.

ராஜேஷ்: . பெருந்தேவனாரும் எழுதியிருக்கிறார்.

பொன்: இன்னொருவரும் எழுதியிருக்கிறார். அவர் பெயர் கல்லாப்பிள்ளை...சில அழைப்பு களின் அடியில் R. S. V. P. என்று போட்டிருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா?

அதற்கு என்ன பொருள்?

எல்லாரும் : மெளனம்.

பொன் : தெரியவில்லையா? நானே சொல்கிறேன். 'முடிந்தால் தயவு செய்து பதிலளிக்கவும்' என்றுதான் அர்த்தம், ஆனால், இது Repondez S’il Vous Plait என்ற பிரெஞ்சு வாக்கியத்தின் சுருக்கம்தான்! ... சமீபத்தில் நான் ஒரு கதை படித்தேன். ”அமாவாசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/15&oldid=494368" இலிருந்து மீள்விக்கப்பட்டது