இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27
விஜி : எனக்குப் படமே போட வராது.
கனகசபை : நான் போட்டுப் பார்க்கிறேன்.
யாழினி: இதோ ஒரு நொடியிலே போட்டுக் காட்டுகிறேன்... இதோ, என் படம் எப்படியக்கா இருக்கு ?
(படம்)
உமா : அடடே, யாழினி எவ்வளவு ஜோரா வரைஞ்சிருக்கிறாள்! வருங்காலத்தில் பெரிய ஒவியராய் வரப்போகிறாள். இப்போது நான் ஒரு விடுகதை போடுவேன். இதற்கு விடை என்ன? அது எந்த நாட்டு விடுகதை என்று சொல்லனும். ’முண்டாசு கட்டின சின்னப் பையன் வீட்டுச் சுவரில் மோதினான்; வெளிச்சம் போட்டுச் செத்தான்'
கனகசபை : அது தீக்குச்சிதானே?.
உமா : ஆமாம். தீக்குச்சிதான். அது எந்த நாட்டு விடுகதை?
கனகசபை : அமெரிக்க நாட்டு விடுகதை,