பக்கம்:கேள்வி நேரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


அவர்களில் ஒருவர் பெயர் சுகதேவ், மற்றொருவர் பெயர் ராஜகுரு. நம் உடம்பின் எடையிலே எத்தனை சதவிகிதம் இரத்தம் இருக்கிறது? சொல்ல முடியுமா?

கிரி : 12-ல் ஒரு பங்கு

சரளா : நான் சதவிகிதத்தில் கேட்டேன். பரவாயில்லை. உடம்பின் எடையில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் இரத்தம் இருக்கிறது...விதை யில்லாப் பழங்கள் என்னென்ன?

பிரிதி : வாழைப்பழம்.

சரளா: சரிதான் சிலவகை திராட்சை, கிச்சிலியிலும் விதை இருப்பதில்லை. இப்போது நான் ஒரு பாட்டின் ஆரம்பத்தில் உள்ள இரண்டு வரிகளைச் சொல்கிறேன். உடனே பாட்டை எழுதியவர் யார் என்று சொல்லிவிட வேண்டும். எங்கே பார்க்கலாம்?

கொல்லையிலே கொய்யாப்பூ-அது

கொண்டையிலே வையாப்பூ.

பிரின்ஸ் : கவிஞர் கண்ணதாசன், சரளா இல்லை.

கிரி : பாரதிதாசன்.

சரளா: சரியாக விடை சொன்னாய்... செவ்விந்தியர்கள் என்கிறார்களே, அவர்களுக்கும் இந்தியர்களாகிய நமக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/38&oldid=484623" இலிருந்து மீள்விக்கப்பட்டது