இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38
பிரின்ஸ் : ஆந்தையைப் பார்த்தால் துரதிர்ஷ்டம் என்கிறார்கள்.
சரளா : அதெல்லாம் தவறான கருத்து. நமக்கு ஆந்தை நன்மை செய்கிறதா? தீமை செய்கிறதா?
பிரீதி : நன்மைதான்.
சரளா: எப்படி?
பிரீதி: அது பகலெல்லாம் மரப்பொந்திலே இருந்துவிட்டு, இரவிலே வெளியில் வரும். அப்போது பயிர்களை அழிக்கிற எலிகளையும் பூச்சிகளையும் பிடித்துத் தின்கிறது. ஆகையால், அது நமக்கு நன்மைதானே செய்கிறது?
சரளா: ஆம் நன்றாகச் சொன்னாய்... இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். நன்றாகப் பாருங்கள்....