இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46
தங்கம் : நெருப்புக் கோழி.
சிவம் : அதுவும் இல்லை.
ஜோதி : எனக்குத் தெரியும். பெங்குவின்.
சிவம் : கரெக்ட். ஆண் பெங்குவின் எட்டு வாரங்கள் எதுவுமே சாப்பிடாமல் அடை காக்கும்.
அடுத்ததாக ஒரு கேள்வி. மக்கா, மதினா என்ற இரு நகரங்களும் எந்த எந்த நாட்டில் உள்ளன? ஏன் அவற்றைப் புண்ணிய நகரங் களாகக் கருதுகிறார்கள்?
தங்கம் : இரண்டுமே ஒரே நாட்டில் - அரேபியாவில்தான் இருக்கின்றன. நபிகள் நாயகம் பிறந்தது மக்காவில்;காலமானது மதினாவில்.
சிவம் : தங்கமாரி! நீ மிகவும் சரியாகச் சொல்லி விட்டாய்,