பக்கம்:கேள்வி நேரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்புக் குழந்தைகளே,

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும், உங்கள் உள்ளத்திலே ஒரு மகிழ்ச்சி தோன்றும்.

"இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பு இருந்ததை விட, இப்போது நம் பொது அறிவு சற்று அதிகமாக வளர்ந்துள்ளது" என்று நீங்கள் நிச்சயமாக நினைத்து மகிழ்வீர்கள்.

இதில் மொத்தம் 11 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும், பெரியவர்களில் ஒருவர் கேள்வி கேட்க, மூன்று நான்கு சிறுவர், சிறுமியர் பதில் கூறுகிறார்கள். மொத்தம் 11 பெரியவர்களும், 38 சிறுவர் சிறுமியரும் பங்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.

வரலாறு, புவிஇயல், விஞ்ஞானம், விளையாட்டு, நுண்கலைகள், தலைவர்களைப் பற்றிய செய்திகள் எனப் பலவற்றையும் இப்புத்தக வாயிலாக அறியலாம்.

வெறும் கேள்வி-பதிலாக இல்லாமல், விடைகளுடன் தேவையான விளக்கங்களையும் காணலாம்.

இதிலுள்ள பகுதிகள் அனைத்தும் ‘கோகுலம்’ மாத இதழில் தொடர்ந்து வெளி வந்தவையே. புத்தகமாக இக் கேள்வி-பதில்களை வெளியிட அனுமதியளித்த ‘கோகுலம்’ நிர்வாகிகளுக்கும், பங்கு கொண்ட பெரியவர்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கும், உள் படங்களை வரைந்து தந்த ஒவியர் ஸூபா அவர்களுக்கும், அட்டைப் படத்தைத் தீட்டித்தந்த ஒவியர் ஆனந்தன் அவர்களுக்கும், புத்தகத்தை உரிய காலத்தில் அச்சிட்டுத் தந்த ஜீவன் அச்சகத்தாருக்கும் எங்கள் நன்றி.


சென்னை-40
பதிப்பாளர்
17-4-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/5&oldid=494360" இலிருந்து மீள்விக்கப்பட்டது