பக்கம்:கேள்வி நேரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


முத்து: சரிதான் அண்ணா.

சிவம் : மாடம் கியூரி என்ற பெயரைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இவர் இரு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணி. முதல் தடவை பெளதிகத்திற்கான நோபல் பரிசை மாடம் கியூரியும், அவர் கணவர் பியர் கியூரியும் சேர்ந்து பெற்றார்கள். இரண்டாம் தடவை ரசாயனத்துக்கான நோபல் பரிசை மாடம் கியூரி பெற்றார். அப்பா, அம்மாவைப் போலவே அவர்களின் மகளும், மாப்பிள்ளையும் சேர்ந்து நோபல் பரிசு பெற்றார்கள். இவர்கள் பெயர் தெரியுமா ?

மூவரும் : தெரியாது அண்ணா.

சிவம் : சரி. நானே சொல்கிறேன். மாடம் கியூரியின் மகள் பெயர் ஐரீன் கியூரி. மாப்பிள்ளையின் பெயர் ழாலியோ கியூரி. செயற்கை முறையில் கதிரியக்கத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/51&oldid=484635" இலிருந்து மீள்விக்கப்பட்டது