இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
58
விஜி : சிங்கம்.
சதீஷ் : இல்லை, புலிதான்.
இரத்தின : சதீஷ் சொன்னதுதான் சரி. ...நம் முதல் குடியரசுத் தலைவர் யார்? அவர் எத்தனை ஆண்டுகள் குடியரசுத் தலைவராக இருந்தார், தெரியுமா ?
விஜி ; ராஜேந்திர பிரசாத். அவர் 10 வருடங்கள் குடியரசுத் தலைவராக இருந்தார்.
இரத்தின : இராஜேந்திர பிரசாத் என்று விஜி சொன்னது சரிதான். ஆனால் 10 ஆண்டுகள் என்பது தவறு. அவர் 12 ஆண்டுகள் குடியரசுத் தலைவராக இருந்தார்.
இப்போது நான் ஒரு பொன்மொழி ;சொல்கிறேன் : அகிம்சை கோழையின் ஆயுதமல்ல: அது விரனின் ஆயுதம்' இதைச் சொன்னவர் யார்?
விஜி : காந்தித் தாத்தாதானே?