இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
75
ரல்லவா? ஆனால், ஆங்கிலக் கதையை எழுதியவர். கோகுலத்தில்கூடப் படித்தேனே!..ம்...ம். ஸ்விப்ட் என்பவர்தான்.
தேனி: அவரது முழுப் பெயர் தெரியாதா?
கார்த்தி: இதோ சொல்கிறேன். சோமநாதன். இல்லை, இல்லை. ஜொனாதன் ஸ்விப்ட், சரிதானே அண்ணா?
தேனி: ரொம்ப கரெக்ட். Jonathan Swift என்பவர்தான் கலிவரின் பயணங்களை எழுதினவர்...இலங்கைக்கு சிறீலங்கா என்று புதிய பெயர் சூட்டியது எப்போது என்று கூற முடியுமா?
லிங்க : அது குடியரசு நாடானபோது.
தேனி: சரியான விடை. 1972-ஆம் ஆண்டில் அது குடியரசானது. அப்போது சிறீலங்கா என்று பெயர் சூட்டினார்கள்...நம்முடைய ராஜாஜி, பெரியார் இருவரும் 94 ஆண்டுகள் வாழ்ந்தனர். இவர்களைப் போலவே 94 ஆண்டுகள் வாழ்ந்தார் ஒர் ஆங்கில நாடக ஆசிரியர். அவர் பெயர் தெரியுமா?
சசி : ஷேக்ஸ்பியர்.
தேனி: இல்லை. அவர் 52-ஆம் வயதிலேயே காலமாகி விட்டார். கார்த்தி: பெர்னாட் ஷா,