பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120


லிருந்த காரணம், தனக்கு, வெளியிலிருந்து வரவேண்டிய அரசரின் உதவியை எதிர்பார்த்திருந்தது தான். இவன் எதிர் பார்த்திருந்த உதவி கிடைத்த பிறகு இவன் கிள்ளிவளவ னுடன் போர் செய்தான். போரின் முடிவு அவனுக்குத் தோல் வியாக இருந்தது; சோழன் கிள்ளிவளவனே வென்றான்.

   போரில் கருவூர்க் கோட்டையைக் கிள்ளிவளவன் தீயிட்டுக் கொளுத்தினான். மாடமாளிகைகள் எரிந்து விழுந்தன.* 
  சோழன், கொங்குநாட்டின் தலை நகரை வென்றபடியால் கொங்குநாடு முழுவதையுமே வென்றான் என்பது பொருளன்று. கோவூர் கிழார் கிள்ளிவளவனுடைய வெற்றியைப் புகழ்ந்து பாடினார்.** வஞ்சி-கருவூர், குடபுலம்-கொங்குநாடு. இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு, "சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரெறிந்தானைப் பாடியது” என்று கூறுகிறது. மாறோக்கத்து நப்பசலையாரும் சோழனுடைய கருவூர் வெற்றியைப் புகழ்ந்து பாடியுள்ளார். ****

________

* * "வேந்து புறங்கொடுத்த வீய்ந்துகு பறந்தலை, மாட மயங்கெரி மண்டிக் கோடிறுபு, உருமு எறி மலையின் இருநிலஞ்சேர” (புறம். 373:19-21) * "கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே" என்றும், "வஞ்சி முற்றம் வயக்களனாக, அஞ்சா மறவர் ஆட்போர் பழித்துக், கொண்டனை பெரும் குடபுலத்ததரி" என்றுங் கூறுகிறார். புறம் 373. *** எழு சமங்கடந்த எழுவுறழ் திணிதோள், கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ, யாங்கன மொழிகோ யானே ஓங்கிய, வரையளந்தறியாப் பொன்படு நெடுங்கோட்டு, இமயஞ் சூட்டிய ஏமவிற்பொறி, மாண் வினை நெடுந்தேர் வானவன் தொலைய, வாடாவஞ்சி நாட்டு நின், பீடுகெழு நோன்றாள் பாடுங்காலே.” (புறம் 39:11-18) இமயஞ் சூட்டிய ஏமவிற்பொறி-சேர அரசரின்