பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161

இவ்வாறு பண்டமாற்று பெரும்பாலும் நடந்தது. அதிக விலையுள்ள பொருட்களுச்கு மட்டும் காசுகள் வழங்கப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து அதாவது உரோம தேசத்திலிருந்து வந்த யவனக் கப்பல் வாணிகர், வெள்ளிக்காசு பொற்காசுகளை கொடுத்து இங்கிருந்து விலையுயர்ந்த பொருள்களை வாங்கிக் கொண்டு போனார்கள்.