பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கொங்கு நாட்டு வரலாறு

1

கொங்கு நாடு

டைச் சங்க காலத்திலே, 1,800 ஆண்டுகளுக்கு முன்பு. தமிழகம் ஆறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அந்தப் பிரிவுகள், துளுநாடு சேர நாடு பாண்டி நாடு சோழநாடு அருவா நாடு கொங்கு நாடு என்பவை. இந்த ஆறு நாடுகளில் துளுநாடும் சேரநாடும் மேற்குக் கடற்கரையோரத்தி லிருந்தன. துளு நாடு இப்போது தென்கன்னடம் வட கன்னடம் என்று பெயர் பெற்று மைசூர் இராச்சியத்தோடு இணைந்திருக்கின்றது. சேர நாடு இப்போது கேரள நாடு என்று பெயர் பெற்று மலையாளம் பேசும் நாடாக மாறிப் போயிற்று. தமிழகத்தின் தென் கோடியில் பாண்டி நாடு மூன்று கடல்கள் சூழ்ந்த நாடாக இருந்தது. சோழ நாடும் அருவா நாடும் (தொண்டை நாடு) கிழக்குக் கடற் கரையோரமாக அமைந்துள்ளன. கொங்கு நாடு தமிழகத்தின் இடை நடுவே கடற்கரை இல்லாத உள் நாடாக அமைந்திருந்தது. (படம் காண்க)

கொங்கு நாடு, இப்போது சேலம் வட்டம் கோயம்புத்தூர் வட்டங்களில் அடங்கியிருப்பதாகக் கூறுவர். பிற்காலத்திலே சுருங்கிப்போன கொங்கு நாட்டைத்தான், அதாவது கோயம்புத்தூர் சேலம் வட்டங்களைத்தான், இக் காலத்தில் கொங்கு-கொ -1