பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208


சங்க காலத்துத் தமிழெழுத்து

கடைச்சங்க காலத்தில் வழங்கி வந்த தமிழ் எழுத்தின் வரிவடிவம் எது என்பது இக்காலத்தில் ஒரு கேள்வியாக இருக்கிறது.

தமிழகத்தில் பழங்காலத்தில் வழங்கி வந்தது வட்டெழுத்து தான் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கருதி வந்தனர். அக்காலத்தில் பிராமி எழுத்து தமிழகத்தில் கண்டு பிடிக்கப் படவில்லை. பிறகு, பிராமி எழுத்துகள் தமிழ்நாட்டு மலைக் குகைகளில் எழுதப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டன. பாண்டி நாடு, புதுக்கோட்டை, தொண்டைநாடு, கொங்கு நாடு ஆகிய நாடுகளில் மலைக் குகைளில் கற்பாறைகளிலே பொறிக்கப்பட்ட பிராமி எழுத்துகள் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளன, இவையல்லாமல், அரிக்க மேடு, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம், உறையூர் முதலிய இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்தபோது அவ்விடங்களில் கிடைத்த மட்பாண்டங்களிலும் பிராமி எழுத்துகள் காணப்பட்டன. இவ்வெழுத்துகள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு உட்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. இந்தச் சான்றுகளைக்