பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

213

கொங்கு நாட்டுப்
பிராமி எழுத்துச் சாசனங்கள்


அரசலூர்

கோயம்பத்தூர் மாவட்டத்து ஈரோடு தாலூகாவில் உள்ளது அரசலூர். இது ஈரோடு நகரத்திலிருந்து பன்னிரண்டு மைல் தூரத்திலிருக்கிறது. இங்குள்ள மலைக்கு நாகமலை என்றும் அரசலூர் மலையென்றும் பெயர் உண்டு. இந்த மலையில் தரை மட்டத்திலிருந்து அறுபதடி உயரத்தில் ஆண்டிப்பாறை என்னுங் குகையும் அக்குகையில் கற்படுக் கைகளும் கல்வெட்டு எழுத்துக்களும் உள்ளன. கல்வெட்டெழுத்துக்களில் ஒன்று பிராமி எழுத்து, மற்ற இரண்டு வட்டெழுத்து. இங்கு நம்முடைய ஆய்க்குரியது பிராமி எழுத்து மட்டுமே.

இங்குக் கல்வெட்டெழுத்துக்கள் இருப்பதை 1961 ஆண்டின் தொடக்கத்தில் இந்நூலாசிரியர் மயிலை சீனிவேங்கடசாமி, ஈரோடு புலவர், ம. இராசு மற்றுஞ் சில நண்பர்கள் சென்று கண்டு, இவ்வெழுத்துக்களைக் காகிதத்தில் மைப்படி எடுத்துச் சுதேசமித்திரன்[1], செந்தமிழ்ச் செல்வி பத்திரிகைகளில் வெளியிட்டு உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார்கள். இந்த விவரம் தெரிந்த பிறகு அரசாங்கத்து எபிகிராபி இலாகா

  1. 1961-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 தேதி ஞாயிற்றுக் கிழமை சுதேசமித்திரன். (உள்ளூர்) சென்னை பதிப்பு