பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

யெடுத்துப் போர் செய்தான். அவனை நெடுமான் அஞ்சியும் பொகுட்டெழினியும் எதிர்த்துப் போர் செய்தார்கள். பெருஞ் சேரலிரும்பொறை வெற்றி பெற்றுத் தகடூரைக் கைப்பற்றினான்.

நெடுங்காலம் சுதந்தரமாக அரசாண்டிருந்த அதிகமான் அரசர் தகடூர்ப் போருக்குப் பிறகு கொங்குச் சேரருக்குக் கீழடங்கி அரசாண்டார்கள். அதிகமான் அரசர் பரம்பரை கி. பி. 13-ஆம் நூற்றாண்டிலும் இருந்தது என்பதற்குச் சாசனச் சான்றுகள் உள்ளன.

கடைச்சங்க காலத்தில் இருந்த அதிகமான் அரசர் பரம்பரையில் கீழ்க்கண்டவர் நமக்கு தெரிகின்றனர்.

அதிகமான் நெடுமிடல் அஞ்சி


அதிகமான் நெடுமான் அஞ்சி


அதிகமான் பொகுட்டெழினி

ஓரி

கொங்கு நாட்டைச் சேர்ந்த கொல்லி மலையையும் அதனைச் சார்ந்த கொல்லிக் கூற்றத்தையும் அரசாண்ட மன்னர் ஓரி என்று பெயர் பெற்றிருந்தனர். அவர்களுடைய வரலாறு முழுவதும் கிடைக்கவில்லை. அவர்களில் ஒருவன் ஆதனோரி. இவன் வள்ளலாக விளங்கினான். இவன் தன்னை நாடிவந்த புலவர்களுக்கு யானையையும் தானங் கொடுத்தான்.[1] இவன் கடை ஏழு வள்ளல்களில் ஒருவனாகக் கூறப்படுகின்றான். இவன் போருக்குப் போகும்போது தன்னுடைய


  1. “இழையணி யானை இரப்போர்க் கீயும், சுடர்விடு பசும்பூண் சூர்ப்பமை முன்கை, அடுபோர் ஆனா ஆதனோரி, மாரி வண்கொடை” (பழம், 153: 2-5) வெம்போர். மழவர் பெருமகன் மாவள் ளோரி, கைவளம்" (நற். 52: 8-10)