பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

யாகத் துளு நாட்டரசனின் மேல் படையெடுத்துச் சென்றான். துளு நாட்டரசனின் சேனாதிபதியான மிஞிலி, பாழி என்னும் போர்க்களத்தில் ஆய் எயினனுடன் போர் செய்து அவனைக் கொன்றான்.[1] இந்த வெளியன் வேண்மான் ஆய் எயினன், நாட்டரசனாகிய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலினுடைய சேனாதிபதி, துளுநாட்டு நன்னன் தான் கருதியது போல் புன்னாட்டைக் கைப்பற்ற முடியவில்லை.

புன்னாட்டரசர் கொங்குச் சேரர்களுக்குக் கீழ் அடங்கியிருந்தனர் என்று தெரிகின்றது. பெரும்பூண் சென்னி என்னுஞ் சோழன் புன்னாட்டைக் கைப்பற்ற எண்ணித் தன்னுடைய சேனாபதி பழையன் என்பவன் தலைமையில் தன்னுடைய சேனையை யனுப்பினான். பழையன் புன்னாட்டுக் கட்டூரின் மேல் படையெடுத்துச் சென்றான். புன்னாட்டரசனுக்கு உதவியாகக் கங்க அரசன், கட்டியரசன், அத்தி, புன்றுறை முதலியவர்கள் இருந்து பழையனுடன் போர் செய்தார்கள். அப்போரில் பழையன் இறந்து போனான்.[2]

புன்னாட்டரசர் சங்க காலத்துக்குப் பிறகும் கி. பி. 5-ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் அரசாண்டனர். புன்னாட்டில் கிடைத்த ஒருசாசன எழுத்து புன்னாட்டரசர் சிலருடைய பெயர்


  • "பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென, யாழிசை மறுகின் பாழியாங்கண், அஞ்சலென்ற ஆ அய் எயினன், இகலடு கற்பின் மிமிலி யொடு தாக்கித் தன்னுயிர் கொடுத் தனன்" (அகம், 396:2-6) “வெனியன் வேண்மான் ஆ அய் எயினன், அளியியல் வாழ்க்கைப் பாழிப்பறந்தலை இழையணி யானை இயல்தேர் மிருவியொடு, நண்பகல் உற்ற செருவிற் புண்கூர்ந்து, ஒள்வாள் மயங்கமர் வீழ்த்தென” (அகம் 208:5-9)
  • "நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி, துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றங்கு, அன்றவர் குழீஇ அளப்பருங்கட்டூர்ப், பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டென்" (அகம். 44:7-11)