பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பெருஞ்சேரல் இரும்பொறை

செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பிறகு அவனுடைய மூத்த மகனான பெருஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டை யரசாண்டான். இவன், தன் இராச்சியத்தில் அடங்காமல் சுதந்தரமாக இருந்த கொங்கு அரசர்களை வென்று அவர்களின், நாடுகளைத் தன்னுடைய இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டான். இவன் ‘கொடித் தேர்ப் பொறையன்’, ‘சினப்போர்ப் பொறையன்’, ‘பொலந்தேர்யானை’, ‘இயல் தேர்ப் பொறையன்’ என்று கூறப்படுகிறான். இவன் ‘புண்ணுடை எறுழ்த்தோள்’ உடையவன். அதாவது, எப்பொழுதும் போர் செய்து அதனால் ஏற்பட்ட புண் ஆறாத வலிமையுடைய தோள்களை யுடையவன். தகடூர் நாட்டை வென்றபடியால் இவன், “தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை” என்று பெயர் பெற்றான். இவன் வென்ற போர்களில் மூன்று போர்கள் முக்கியமானவை. அவை காமூர்ப் போர், கொல்லிப்போர், தகடூர்ப்போர் என்பவை.

காமூர்ப் போர்

கொங்கு நாட்டில் காமூர் என்னும் ஊர் இருந்தது. அதன் அரசன் கழுவுள் என்பவன். முல்லை நிலமாகிய காமூரில் இடையர்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்களின் தலைவனாகிய கழுவுள், பெருஞ்சேரலிரும் பொறைக்கு அடங்