பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
106

"இருந்தாலும் அவன் செய்கை எனக்குப் புதிராகவே தோன்றுகிறது."

"ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறைபாடு இருக்கும். பச்சை குத்திக்கொள்வதிலே அவனுக்கு ஆசை. அதுவே அவன் செய்த தவறு. இப்படித்தான் எதாவது ஒரு வகையில் குற்றம் புரிகிறவர்கள் மாட்டிக்கொள்வார்கள்" என்று மேலும் என்னவோ விளக்கம் கொடுக்கத் தொடங்கினார் வடிவேல்.

ஆனால் சுந்தரம் அதற்கு விடவில்லை. "மாமா, நீங்கள் துப்பறியும் கதைகள்தான் படிக்கிறீர்கள். தங்கமணியோ துப்பறியும் சாம்புவே ஆகிவிட்டான். அவன் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல முடியாது. பேசாமல் துப்பறியும் உத்தியோகத்திற்கு அவனை அனுப்பிவிடுங்கள். இந்தக் குரங்கும் அவனோடு போகட்டும்" என்றான் சுந்தரம்.

"அப்பா, சுந்தரத்தை சர்க்கசில் பபூன் வேடத்திற்கு அனுப்பலாம்" என்றாள் கண்ணகி.

அனைவரும் 'கொல்’ என்று சிரித்தார்கள்.