பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ரகசியமான வழிகள் தாம். எங்களுக்குமட்டுத் தெரியும்” என் தில்லைநாயகம் தெரிவித்தார்.

“வஞ்சியாற்றின் வழியாக வந்திருந்தால் அவன் எப்படி மேலே ஏற முடியும்? நூலேணியைக் கீழே விட யாரு இல்லையே!” என்று சுந்தரம் கேட்டான்.

“நாம் வரும்போது கீழே விட்ட நூலேணியை மேலே இழுத்து வைக்க மறந்துவிட்டோம்” என்று மருதாசலம் கூறினான்.

இந்தச் சமயத்திலே யாரோ சீழ்க்கையடிக்கும் ஓர் கேட்டது. “பரிசலில் யாரோ வந்திருக்கிறார்கள். எங்கள் எஜமானரோடு வந்தவர்களாக இருக்கலாம்” என்று கவலையோடு தில்லைநாயகம் சொன்னார்.

இதையெல்லாம் கவனத்தோடு கேட்டுக்கொண்டிருத் தங்கமணி, “இங்கிருந்தபடியே யாருக்கும் தெரியாமல் அந்த பரிசலில் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க முடியுமா?” என்று கேட்டான்.

“அதோ! அந்தக் குன்றின் மேலே ஏறினால் மறைவா நின்று நன்றாகப் பார்க்கலாம்” என்று தில்லைநாயகம் கூறவே உடனே தங்கமணி, “மருதாசலம், நீ ஓடிப்போய்ப் பார்த்த வா. அவர்கள் உன்னைப் பார்க்காமல் எச்சரிக்கையாக இரு” என்றான். மருதாசலம் ஒரே ஓட்டமாக ஓடிப்போய்ப் பார்த்து விட்டுத் திரும்பினான். “பரிசலைக் கரையில் இழுத்துவிட்டுவிட்டு அங்கே ஐந்துபேர் உட்கார்ந்து இருக்கிறார்கள்” என்று அவர் மூச்சு இரைக்க இரைக்கத் தெரிவித்தான். அந்தச் சமயத்தில் மறுபடியும் சீழ்க்கை ஒலி கேட்டது.

“மேலே வரலாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள் இந்தச் சீழ்க்கைக்கு இது தான் அர்த்தம்” என்று தில்லைநாயகம் பயந்த குரலில் சொன்னார்.

“அவர்களை மேலே வரும்படி நீ பதில் சீழ்க்கை அடி” என்று தங்கமணி கூறினான்.

“ஐயோ, வேண்டவே வேண்டாம். அந்த ஐந்து பேரும் வந்தால் அப்புறம் நம் பாடு திண்டாட்டந்தான்” என்று தில்லைநாயகம் அவசரமாகத் தெரிவித்தார்.