பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

55


விசில் ஒலி கிளம்பிய உடனேயே, ஓட்டக்காரர்களைத் தொடுவதற்கு ஓடலாம் என்பதுதான் விதி. தொட்டு விட்டால், அது சரிதான் என்பதையும் உணர்ந்து கொண்டு, விதியுடன் ஆடப் பழகிக் கொள்ள வேண்டும்.

2. இரண்டாவது முறை ஆட்டம் (Second Inning)
தொடங்குகிற பொழுது

ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு முறை விரட்டுகிற வாய்ப்பும் இரண்டு முறை ஓடுகின்ற வாய்ப்பும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும்.

முதல் முறை ஓட வாய்ப்புக் கிடைக்கிற பொழுது (Running Turn) குறிப்பிட்ட 9 நிமிடத்திற்குள் எத்தனை பேர் தொடப்பட்டு வெளியேற்றப்படுகின்றார்களோ, அத்தனை பேர்களும் வெளியேற்றப்பட்டு, தொடப்பட்டதற்காக ஒவ்வொரு வெற்றி எண்ணும் எதிர்க் குழுவிற்குப் போய்ச் சேரும்.

மீண்டும் அடுத்த முறை ஆட்டத்தில் (இரண்டாவது தடவையாக) ஓட வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, ‘முதல் மூவர்’ என்றவாறு தான் ஓட்டக்காரர்களை அனுப்பி ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

முதல் முறை ஆட்டத்தில் எத்தனை பேர் தொடப்பட்டு வெளியேற்றப்பட்டாலும், அந்த முறை ஆட்டம் முடிவடைகின்ற பொழுதே, தொடப்பட்டவர் நிலையும் முடிந்து போய்விடுகிறது. மீண்டும் இரண்டாவது முறை, ஓட்டக்காரர்களாகும் பொழுது, முதலிலிருந்தே அதாவது (முதல் மூன்று ஆட்டக்காரர்) ஓடும் வரிசை முறையில் முதல் மூவரையே மீண்டும் உள்ளே அனுப்பி ஆடச் செய்யலாம். அதுவே ஆடும் முறையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/57&oldid=1377513" இலிருந்து மீள்விக்கப்பட்டது