பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டம் குறைந்ததுவா கூறுங்கள் புதுமைத்தேன் நாட்டம் மிகுந்துள்ள நங்கையர்கள் எத்தனைபேர்? ○ தானிய உற்பத்தி பெருக்கும் வயல்களை நன்செய் என்போம் புன்செய் என்போம் பிள்ளை உற்பத்தியைப் பெருக்க இதோ ஒரு பெண்செய்' என்று பேசாமல் பேசும் ஆண்கள் கொட்டத்தை அடக்கினோமா? Ꮕ உரலுக்கு ஒருபக்கம் மத்தளத்துக்கு இரண்டு பக்கம் மங்கைக்கோ - தந்தை கணவன் மைந்தன் என்று தாக்குதல் நடப்பது மூன்று பக்கமும்.... மூவேந்தர்கள் ஒன்று கூடிப் பொய்ம்முகங் காட்டிப் பொன்மயமான பறம்பை வென்றனர்..... பாரியைக் கொன்றனர்..... அன்று இன்றும் அதே கதை.... ஒவ்வொரு விடும் பறம்பே..... ஒவ்வொரு வீட்டுப் பாரியும் அப்பாரியே.... 104 0 மீரா