பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்தாப்பு வெளிச்சத்துக் கிடையில் ஒரு துருவ நட்சத்திரம்; சாராய வாடைக்கிடையில் ஒரு சந்தன நறுமணம்: புன்மைப் பொய்களுக்கிடையில் ஒரு புனித உண்மை; சுரண்டிய வெள்ளை இருட்டுக்கிடையில் ஒரு சுதந்திர தீபம், தியாக தீபம். {o} சிலருடைய எழுத்து தினமும் கிழிபடும் காலண்டர் இன்னும் சிலருடைய எழுத்து வருடக் கடைசியில் பழசாகிப் போகும் பஞ்சாங்கம்; உன் எழுத்து இனிவரும் யுகத்தையும் காட்டும் தூர தரிசனம். ○ மஞ்சத்தில் கசங்கும் மல்லிகைப் பூ அல்ல; நெஞ்சத்தைக் கிள்ளிக் கிறங்க வைக்கும் ரோஜாப் பூ அல்ல; கரிசல் காட்டுக் கர்ம வீரனே, மானத்தை மறைக்கும்ஆடை அளிக்கும் 120 0 மீரா