பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமதேனு போல.... கற்பகத் தரு போல.... 'உங்களுடன் பள்ளியிலே ஒன்றாய்ப் படித்த தங்கராசு மனைவி தனம்போல் மதிப்பாய் மாருதியில் போக ஆசை மாதத் தவணையில் வாங்கினால் என்னவென்று வாய் ஓயாமல்நான் சொன்னாலும் வந்தவாசி சாலைக்குக் கிழக்கே கிடக்கும் புஞ்சையினை வீட்டுமனை போட்டு விற்றதும் உன் நேயர் விருப்பம் நிறைவேறும் என்று போகாத ஊருக்கு வழிகாட்டிப் புறப்பட்டு விடுகிறீர்கள்; பூ வாங்கி வரட்டுமா என்று பொல்லாத சாகசம் புரிகிறீர்கள்.... 128 O மீரா