பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவின் கடைசி உயில் என்று அழைக்கப்பட்ட, தம்பிக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் மீராவின் கவிதையை மேற்கோளாகக் காட்டும் அளவிற்கு அண்ணாவின் நெஞ்சில் இடம் பிடித்தவர் மீரா, மீரா, தன் வாரிசுகளையும் இலக்கியத் தடங்களில் நடக்கவிட்டிருப்பது, பெருமை. அவரது புதல்வர் கதிர், அகரம் பதிப்பகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார். இளைய தலைமுறை எழுத்துக்கு ஆதரவு, புதிய எழுத்துக்கு ஒரு வரவேற்பு, புதுமை இலக்கியங்களுக்கு ஒரு பதிப்பகம், அச்சகம், நல்ல எழுத்தில் சாதி, குலம் பார்க்காத பேருள்ளம் - இப்படி படைப்பு, பதிப்பு, படிப்பு என்று முப்பெரும் சாதனை படைத்த மீராவை, சந்திப்பதே ஒரு கவிதை படித்த உணர்வை ஏற்படுத்தும். இரா.மணிகண்டன் நன்றி: குமுதம் 29.3.2007 204