பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனாக இனிக்கும் என்று தேடி நானாகவா வந்தேன்? பள்ளிக்குப் போகும்போது படத்தில் நடிக்கலாம் வா என்றான் ஒர் எத்தன் இந்த இடத்தில் விட்டுப் போய்விட்டான்' என்றாள். O எதிரே கும்பலில் இருந்தொரு குரல் கேட்டது. என் அப்பாவுக்கு எட்டாவது பெண்நான். வரதட்சணை கொடுக்க வழியில்லாமல் திரும்பி வராத திசையில் போனார். நானோ, என் காலில் நிற்க நினைத்தேன் கல்யாணத்துக்குத் கை நிறையச் சேர்க்க இங்கே வந்தேன் நித்ய கல்யாணியாய் நிற்கிறேன் என்றாள். 34 0 மீரா