பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் சுவரொட்டி! எதற்கும் சுவரொட்டி! சுவரின்றிச் சித்திரம் வரைய முடியுமா என்று நம் முன்னோர் சும்மாவா சொன்னார்: முன்னோர் மொழியைப் பொன்னே போல் போற்றுகிறோம் இன்னும் ஒருபடி மேலேநாம் போகின்றோம். தீபாவளித் திருநாளில் சின்னப் பிள்ளைகள் மத்தாப்பு வெடிஎன்று காசைக் கரியாக்கிக் காட்டுவார்..... தேர்தல் பெருநாளில் தேசத்தைக் காப்பாற்றும் பெரிய பிள்ளைகள் பிரியமுடன் பல இலட்சம் செலவில் போஸ்டர்கள் 66 0 மீரா