பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

2. நான் சொல்லுகிறேன்

கோயில்கள் வேண்டாம்.

அவை சக்த ரகமான கோயிலாக இருந்தாலும் சரி - அத்தனையும் மனிதனின் அறியாமையை விளம்பரப்படுத்துகிற தீபஸ்தம்பங்களே தவிர, ஞான ஒளிபரப்புகின்ற நிலயங்கள் அல்ல.

விவிலியம் முழங்குகின்ற மாதா கோவிலிலிருந்து ஆகாயத்தை அளாவும் கோபுரங்கள் தாங்கும் தமிழ்நாட்டுக்கோவில்கள் வரை - எல்லாம் அறியாமைக் குன்றங்கள். மனிதனை உருப்படாமல் அடிக்கும் கோட்டைகள். அறிவுச் சூன்யத்தையும் அசட்டுத் தனத்தையும், அடிமைப்பண்பையும். விபசாரத்தையும்ம் பரப்புகிற பவனங்கள் அவை.

அவை மூடப்பட வேண்டும்.

முதலில், தமிழ் நாட்டுத் திருக்கோயில்கள் மூடப்பட வேணும்.

'ஆலயப் பிரவேசம்' என்று பேசப்படுகிறது. இன்று மனித குலத்தின் முக்கிய வளர்ச்சிக்கு 'ஆலயப் பிரவேசம்' தேவையில்லை ஆலய மூடு விழாக்களே தேவை.

நான் சொல்கிறேன் - கோயில் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம். 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றது' அந்தக் காலம்! அந்தச் சட்டம் எடுபடாது. தேவையில்லை. முட்டாள் தனமானதும் கூட!

சிந்தனைக்குச் சமாதி கட்டுவதேயாகும் கோயிலை வழிபடுவது. வளர்ப்பது.