பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பதிகளும் ராமநாம பஜனைக்காரர்களும் அல்ல. பட்டினி விரதமகாத்மாக்களும் அடிவருடிகளும் அல்ல. ஆத்ம முன்னேற்றம் என்று சொல்லி ஆரியத்துக்கு அடிபணியத்தாண்டும் ஆச்சார்யாக்கள் தேவையில்லே. மண்ணோடு மண்ணாகக் குனிகின்ற மக்களே மனிதராக்க வல்ல தலைவர்கள், கவிஞர்கள், இலக்கியாசிரியர்கள் தேவை, சிந்தனே ஒளி சமைக்கின்ற புதியுக் வளர்ச்சிக்காக எதையும் எதிர்த்து விற்கத் துணிந்தவைர நெஞ்சுடையார் தேவை.

ராமதாஸர்கள் தேவையில்லே.
ராவணதாஸர்களே வேண்டும்.

விபீஷ்ணர்களும், கோபுரம் கோபுரமாய் உருவாக்கும் ராஜராஜர்களும் தேவையில்லை.

கஜினிமுகம்மதுவின் அடிச்சுவட்டைப்பின் பற்றுபவர்களே தேவை.

புதியதோர் உலகம் செய்வதற்காக: 'கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்பதற்காக' மானுஷிகத்தின் மேன்மையை மிளிரச் செய்வதற்காக அதற்கு முதல் வேலைதான் கோயில்களே மூடுவது.

இப்படிச் சொல்லும் என்னை சமுதாயம் ஏசலாம். பக்தியற்ற பதர் எனத் தூற்றலாம். பாரதத்தின் புனிதத்தைக் கெடுக்க வந்த புல்லுருவி, தமிழகத்தின் மாண்பை மாய்க்க வந்த தறுதலை என்று சொல்லெறியலாம். எனக்கு 'ரெளரவாதி கரகம்’ கிடைக்கும் எனச் சபிக்கலாம்! கவலையில்லை.

அப்படி வசைபாடுகிற தோழர்களுக்கு நான் சொல்கிறேன்--